இந்தியா
வீடியோ ரீல்ஸ் எடுக்க முயன்று ஆற்றில் மூழ்கி 6 சிறுமிகள் பரிதாப பலி
- ஆக்ராவில் உள்ள யமுனை நதியில் வீடியோ ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.
- இறந்த ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனை நதியில் வீடியோ ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த ஆறு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று வயல்களில் வேலை செய்துவிட்டு அவர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தனர். நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அவர்கள் முதலில் ஆற்றங்கரையில் விளையாடி ரீல்ஸ் வீடியோ எடுத்ததைக் கண்டனர்.
பின்னர் ரீல்ஸ் எடுக்க ஆழத்திற்குச் சென்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பல மணி நேரத்திற்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இறந்த ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.