ஐதராபாத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5 லட்சம் பேர் நீக்கம்
- மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
- அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-ஐதராபாத் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 201 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர்.
4 லட்சத்து 39 ஆயிரத்து 801 பேர் வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து உள்ளனர். 54 ஆயிரத்து 259 பேர் போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் உள்ளதால் வாக்கு சதவீதம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
1 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேரின் வீட்டு முகவரிகள் தவறாக இருந்தது. அவைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.