இந்தியா

விதிகளை மீறிய 43 OTT தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

Published On 2025-07-31 02:00 IST   |   Update On 2025-07-31 02:00:00 IST
  • 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள நெறிமுறை விதிகளைப் பின்பற்றத் தவறியதே இதற்கு காரணம்
  • தடை செய்யப்பட்ட ஐந்து தளங்கள் புதிய Domain-களில் மீண்டும் செயல்படத்தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விதிகளை மீறிய 43 OTT தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த தளங்கள் 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள நெறிமுறை விதிகளைப் பின்பற்றத் தவறியதே இதற்கு காரணம் என்று அவர் மக்களவையில் கூறினார்.

நிர்வாணம், பாலியல், வன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தை வகைப்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் பார்ப்பதைத் தடுப்பதற்கான பாதுகாப்புகளை செயல்படுத்துதல் போன்ற விதிகளை இந்த தளங்கள் மீறியுள்ளன.

அதன்படி, 2024 மார்ச்சில் 18 OTT தளங்களும், 2025 ஜூலை 23 அன்று 25 OTT தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே மார்ச் 2024 இல் தடை செய்யப்பட்ட ஐந்து தளங்கள் புதிய Domain-களில் மீண்டும் செயல்படத்தொடங்கி , ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடுவதை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News