இந்தியா

மரத்தின் மீது கார் மோதி பயங்கர விபத்து- 3 இளைஞர்கள் பலி

Published On 2023-04-19 02:43 IST   |   Update On 2023-04-19 02:43:00 IST
  • கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
  • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இமாசலபிரதேசத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ளது பலியாவல் கிராமம். இரவில் இந்த கிராமத்தின் அருகே சாலையில் வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 3 வாலிபர்கள் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் லிப்ட் கேட்டு வந்துள்ளார். மற்ற 2 பேரும் அருகில் உள்ள நகருக்கு சென்று சாப்பிட்டு வருவதாக கூறி சென்றுள்ளனர்.

வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News