இந்தியா

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி - பலர் சிக்கியுள்ளதால் அச்சம்

Published On 2023-06-09 11:10 GMT   |   Update On 2023-06-09 11:10 GMT
  • நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.
  • இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News