இந்தியா
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

பாடகர் சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது- அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2022-06-03 16:25 IST   |   Update On 2022-06-03 16:25:00 IST
சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் ஜவஹர் கே கிராமத்தில் 28 வயதான பாடகர் சித்து மூஸ் வாலா (28) மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், சித்து உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

பஞ்சாபில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் அதைச் சுற்றி அரசியல் இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது.

பஞ்சாப் முதல்வர் இந்த விவகாரத்தில் தங்களால் இயன்றவரை முயற்சிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. ரெயில்களில் அதிக ‘லக்கேஜ்’ எடுத்து சென்றால் தனி கட்டணம்- பயணிகளிடம் வசூலிக்க நடவடிக்கை
Tags:    

Similar News