இந்தியா
விபத்து

சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்- 3 பேர் மரணம்

Published On 2022-05-23 04:01 GMT   |   Update On 2022-05-23 04:05 GMT
இந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர்.
பாலக்காடு:

கேரள மாநிலம், ஆலப்புழை அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்த பைபி என்ற 72 வயது முதியவர் தனது குடும்பத்துடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு சுற்றுலா சென்றார். 

சுற்றுலா முடிந்த அவர் நேற்று சேர்த்தலாவிற்க்கு திரும்பிகொண்டிருந்தபோது, பாலக்காடு வடக்கஞ்சேரி அருகே மாலை 5 மணி அளவில் அவர் வந்த டெம்போ டிராவலர் வாகனம், சிற்றூர் நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. 

இதில் பைபி, அவருடைய மனைவி ரோஸ்லி (65), பைபியின் தம்பி மனைவி ஜெலி (51). ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News