இந்தியா
ராகுல் காந்தி

நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது: ராகுல் காந்தி விளாசல்

Published On 2022-05-16 10:08 GMT   |   Update On 2022-05-16 10:08 GMT
மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரே ஒரு இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது என ராகுல் காந்தி கூறினார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசியதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் வலுப்படுத்தப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு அழித்துக்கொண்டிருக்கிறது.

பாஜகவும் பிரதமர் மோடியும் இரண்டு இந்தியாவை உருவாக்க விரும்புகிறார்கள். ஒன்று பணக்காரர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மூன்று தொழிலதிபர்களுக்குமானது. மற்றொன்று தலித்துகள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கானது. 

எங்களுக்கு இரண்டு இந்தியா வேண்டாம். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரே ஒரு இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது. இதுதான் இப்போது நாட்டில் நடக்கும் சண்டை.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News