இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே 31 சதவீதம் பெறும் நிலையில், இனிமேல் 34 சதவீத அகவிலைப்படி பெறுவார்கள்.
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9544.5 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். 47.68 லட்சம் ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் 14 விரைவு ரெயில் மீண்டும் இயக்கம்