இந்தியா
ராகுல் காந்தி

நான் பயப்பட மாட்டேன் என்பதையே பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் - ராகுல் காந்தி பதிலடி

Published On 2022-02-10 09:44 GMT   |   Update On 2022-02-10 12:06 GMT
உத்தரகாண்டில் பா.ஜ.க.வின் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மங்லார்:

பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்காக பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. 

இந்நிலையில், உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்லாரில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மோடி சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் அவர் சொல்வதைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். அது சரிதான்.
 
எனக்கு பிரதமர் நரேந்திர மோடி மீதோ அல்லது அவரது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் மீதோ பயம் இல்லை.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மற்றும் காங்கிரசால்தான் திரும்பப் பெறப்பட்டன என தெரிவித்தார்.

Tags:    

Similar News