இந்தியா
வந்தே பாரத் ரெயில்

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம்

Published On 2022-02-01 12:54 IST   |   Update On 2022-02-01 12:54:00 IST
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரெயில்கள் கொண்டுவரப்படுகின்றன.

புதுடெல்லி:

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் 2023-க்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரெயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரெயில்கள் கொண்டுவரப்படுகின்றன.

சிறந்த ஆற்றல் திறன் கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரெயில் முனையங்கள் அமைக்கப்படும்.

சிறு விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரெயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... 5ஜி மொபைல் சேவைகள் கொண்டு வரப்படும்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

Similar News