இந்தியா
கல்வி வழங்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் - நிதி மந்திரி தகவல்
1 முதல் 12 வகுப்புகளுக்கு அனைத்து பிராந்திய மொழிகளில் துணைக் கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லி:
பாராளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து பேசினார்.
அதன் விபரம் வருமாறு :
கல்வியை வழங்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களான
மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா, அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 போன்ற
திட்டங்களை மத்திய அரசு முழுமையாகச் சீரமைத்துள்ளது
இயற்கை, பூஜ்ஜிய பட்ஜெட் மற்றும் இயற்கை விவசாயம், நவீன விவசாயம் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேளாண் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட கல்வி இழப்பை ஈடுசெய்ய
1-வகுப்பு-1-டிவி சேனல் 200 டிவி சேனல்களாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 1 முதல் 12 வகுப்புகளுக்கு அனைத்து பிராந்திய மொழிகளில்
துணைக் கல்வியை வழங்க முடியும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை வழங்க
மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.