செய்திகள்
ஜனாதிபதி மாளிகை

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் கைது

Published On 2021-11-17 10:14 GMT   |   Update On 2021-11-17 10:14 GMT
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றவர்கள் அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் மற்றும் அவரது தோழி இருவரும் குடிபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் இருவரும் அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
Tags:    

Similar News