செய்திகள்
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை வீழ்த்தியது ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர்.
இந்நிலையில், குல்காம் மாவட்டம் வான்போரா பகுதியில் ராணுவம், சிஆர்பிஎஸ் மற்றும் போலீசார் இணைந்து இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர்.
இந்நிலையில், குல்காம் மாவட்டம் வான்போரா பகுதியில் ராணுவம், சிஆர்பிஎஸ் மற்றும் போலீசார் இணைந்து இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.