செய்திகள்

அருணாச்சலப்பிரதேசம் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் பதவியேற்றார்

Published On 2019-05-29 09:11 GMT   |   Update On 2019-05-29 09:11 GMT
அருணாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அம்மாநிலத்தில் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் இன்று பதவியேற்றார்.
இட்டாநகர்:

சீனாவை ஒட்டியுள்ள இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் அம்மாநிலத்தின் சட்டசபைக்கும் சேர்த்து கடந்த மாதம் 11-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 41 இடங்களை கைப்பற்றினர்.



இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் இன்று பதவியேற்றார். அவருக்கும் 11 மந்திரிகளுக்கும் அருணாச்சலப்பிரதேசம் கவர்னர் பி.டி.மிஷ்ரா பதவிப் பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

Tags:    

Similar News