செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து

Published On 2019-05-23 21:06 GMT   |   Update On 2019-05-23 21:06 GMT
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போதே, தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். அதேநேரம் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல. இந்த தேர்தல் முடிவுகளை முற்றிலும் மறுஆய்வு செய்து எங்கள் கருத்துக்களை உங்களுக்கு தெரிவிப்போம்.
Tags:    

Similar News