செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவில் வாக்களித்தார்

Published On 2019-05-12 02:43 GMT   |   Update On 2019-05-12 07:04 GMT
பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவிலும், டெல்லியில் கவுதம் காம்பீரும் வாக்களித்தனர்.
புதுடெல்லி:

இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

இதேபோல், டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளரான கவுதம் காம்பீர், ராஜீந்தர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
Tags:    

Similar News