செய்திகள்

மறு வாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம்

Published On 2019-05-09 10:51 GMT   |   Update On 2019-05-09 11:00 GMT
தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019 #SathyaPradhaSahu
புதுடெல்லி:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்தது. இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13  மாவட்டங்கள் அடங்கும் என தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார். எனவே, இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்தார்.
 
இந்நிலையில், தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #EC #LokSabhaElections2019 #SathyaPradhaSahu
Tags:    

Similar News