செய்திகள்

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்றால் அரசியலை விட்டு விலகுவேன் - சித்து சவால்

Published On 2019-04-29 06:47 GMT   |   Update On 2019-04-29 06:47 GMT
பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். #Sidhu #RahulGandhi

சண்டிகர்:

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசில் மந்திரியாக உள்ளார்.

இந்த நிலையில் சித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்று பா.ஜனதா கூறுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்திய விமானபடைக்கு அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டது.


சோனியா காந்தியிடம் இருந்து தேசப்பற்றை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு காங்கிரசை திறமையாக வழிநடத்தினார். அவரது திறமை காரணமாக தான் மத்தியில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதாவுக்கு விசுவாசமாக இருந்ததால் அவர்களை தேசியவாதி என்றும் எதிர்த்தால் தேச விரோதி என்றும் கூறுகிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் நான் அரசியலை விட்டே விலக தயார். ரபேல் விமான விவகாரத்தால் மோடி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவார்

இவ்வாறு அவர் கூறினார். #Sidhu #RahulGandhi

Tags:    

Similar News