மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் - சித்தராமையா
பெங்களூரு:
கர்நாடகாவில் தேவாங்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.பி.மஞ்சப்பாவை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசை மே 23-ந்தேதி கவிழ்க்க புதிய முகூர்த்த நேரம் குறித்துள்ளனர். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ந்தேதி அன்று மோடி ஆட்சி இருக்காது. கூட்டணி அரசு அமையாது. அது முடிவுக்கு வந்துவிடும்.
இதுபோன்று நேரம் குறிப்பது பா.ஜனதா தலைவர்களுக்கு வழக்கமாகி விட்டது. மீண்டும் முதல்- மந்திரியாக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடியூரப்பா இருக்கிறார். ஏற்கனவே அவர் முதல்- மந்திரியாக பதவி ஏற்று மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் 2 நாளில் வீழ்ந்துவிட்டார்.
அவருக்கு சுயமரியாதை இருந்தால் மே 23-ந்தேதி நள்ளிரவில் முதல்-மந்திரி ஆவேன் என அறிக்கைகள் விடக்கூடாது.
அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் மீண்டும் முதல்- மந்திரி ஆவேன். அப்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவேன். இதில் என்ன தவறு உள்ளது. கர்நாடகாவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறாது. ஒற்றை இலக்க எண்ணில் தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #Siddaramaiah #LokSabhaElections2019