செய்திகள்

திரவுபதி துகிலுரிக்கப்பட்டுள்ளார், இன்னும் அமைதி ஏன்? - முலாயமுக்கு சுஷ்மா சூடான கேள்வி

Published On 2019-04-15 11:15 GMT   |   Update On 2019-04-15 11:15 GMT
நடிகை ஜெயப்பிரதாவை ஆசம் கான் தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் மவுனமாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். 

சமீபத்தில் இந்த தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதாவை கடுமையாக தாக்கி பேசினார். ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்திருந்தது தனக்கு தெரியும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஆசம் கானின் கருத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘சகோதரர் முலாயம் சிங் அவர்களே!  நீங்கள்தான் சமாஜ்வாதி கட்சியின் தலைவர். ராம்பூர் தொகுதியில் உங்கள் முன்னால் திரவுபதி துகிலுரிக்கப்பட்டுள்ளார். பீஷ்ம பிதாமகர் போல் அமைதியாக இருக்கும் தவறை நீங்கள் செய்ய வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
Tags:    

Similar News