செய்திகள்

100 கிலோ ஹெராயினுடன் படகில் வந்த ஈரான் நாட்டினர் கைது

Published On 2019-04-13 18:18 IST   |   Update On 2019-04-13 18:18:00 IST
ஈரான் நாட்டில் இருந்து படகு மூலம் 100 கிலோ ஹெராயினை கடத்தி வந்த ஈரான் நாட்டினர் 9 பேரை குஜராத்தில் வழிமறித்து பிடித்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை கைது செய்தனர். #heroinseized
அகமதாபாத்:

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கண்காணித்து தடுக்கும் பணியில் நமது நாட்டின் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்துக்குட்பட்ட கடல் பகுதியில் வந்த ஒரு படகை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்வதற்காக கடலோர காவல் படையினரின் ரோந்துப் படகு விரைந்து சென்றது.

இவர்களை கண்டதும் சந்தேகத்துக்குரிய படகில் வந்தவர்கள் தங்களது படகை திடீரென்று தீயிட்டு கொளுத்தினர். ஈரான் நாட்டை சேர்ந்த அந்த படகை கடலோர காவல் படையினர் நெருங்குவதற்குள் பாதி எரிந்த நிலையில் அந்த படகு நீரில் மூழ்க தொடங்கியது.



அந்த படகை சுற்றிவளைத்த கடலோர காவல் படையினர் அதில் வந்த 9 பேரை கைது செய்தனர். அவர்கள் கடத்திவந்த சுமார் 100 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MarineTaskForce #IranianNationals #100kgheroin #heroinseized 
Tags:    

Similar News