செய்திகள்

100 நாள் வேலைஉறுதி திட்டம் 200 நாட்களாக அதிகரிப்பு, இருமடங்கு சம்பளம் - திரிணாமுல் வாக்குறுதி

Published On 2019-03-27 12:29 GMT   |   Update On 2019-03-27 12:29 GMT
திரிணாமுல் காங்கிரஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைஉறுதி திட்டம் 200 நாட்களாக அதிகரிக்கப்படும். சம்பளமும் இருமடங்காக உயர்த்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. #TMCmanifesto #100dayswork
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பாராளுமன்ற தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை கொல்கத்தா நகரில் இன்று வெளியிட்டார்.

இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

எதிர்க்கட்சிகள் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் 100 நாள் வேலைஉறுதி திட்டம் 200 நாட்களாக அதிகரிக்கப்படும். சம்பளமும் இருமடங்காக உயர்த்தப்படும். பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

மோடி அரசால் ஒழிக்கப்பட்ட மத்திய திட்ட கமிஷனுக்கு புத்துயிர் அளிக்கப்படும். உபயோகமற்ற நிதி ஆயோக் ஒழிக்கப்படும். தற்போதைய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை சீராய்வு செய்யப்படும். மக்களுக்கு பயனளிப்பதாக இருந்தால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. #TMCmanifesto #100dayswork
Tags:    

Similar News