செய்திகள்

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

Published On 2019-03-27 12:09 GMT   |   Update On 2019-03-27 12:09 GMT
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. #TNgovernment #publicholiday #LSpolls
சென்னை:

தமிழ்நட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 18-4-2019 அன்று தேர்தல் நடைபெறுகிறது. அதேநாளில் திருவாரூர் உள்பட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த தேர்தல்களில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 18 -ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. #TNgovernment #publicholiday #LSpolls
Tags:    

Similar News