செய்திகள்

ராகுல் தொகுதியில் பிரியங்கா சூறாவளி பிரசாரம்

Published On 2019-03-27 16:46 IST   |   Update On 2019-03-27 16:46:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். #Priyankacampaigns #Amethicampaign
லக்னோ:

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் நாட்டின் பிரதான கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, கங்கா யாத்திரை என்ற பெயரில் படகு மூலம் சென்று கங்கையாற்றின் கரையோரங்களில் வாழும் மக்களை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதியாக அமேதியில் இன்று அவர் கட்சி பிரமுகர்களையும் வாக்காளர்களையும் சந்தித்தார். முசாபிர்கானா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார்.



அமேதி நகரில் காரில் பேரணியாக சென்று ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டிய பிரியங்கா, தேர்தல் பிரசார கூட்டங்களிலும் உரையாற்றினார். இன்றிரவு வரை அமேதியில் பிரசாரம் செய்யும் அவர், நாளை சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதியான ரேபரேலியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

வெள்ளிக்கிழமை அயோத்தி நகருக்கு செல்லும் பிரியங்கா, அங்குள்ள ஹனுமான்கர்ஹி கோவிலில் வழிபாடு செய்து தனது பிரசாரத்தை தொடங்கவுள்ளார். #Priyankacampaigns #Amethicampaign
Tags:    

Similar News