செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு- இந்திய வீரர் ஒருவர் பலி

Published On 2019-03-18 15:01 IST   |   Update On 2019-03-18 15:01:00 IST
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். #ArmyJawanKilled
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக இன்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியது.  சுந்தெர்பானி செக்டாரில் நடத்தப்பட்ட அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் ராணுவ வீரர் கரம்ஜித் சிங் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.  #ArmyJawanKilled
Tags:    

Similar News