செய்திகள்

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் 3½ கிலோ தங்க நகைகள் கடத்தல் - 3 வாலிபர்கள் கைது

Published On 2019-03-16 04:20 GMT   |   Update On 2019-03-16 04:31 GMT
கோவையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் 3½ கிலோ தங்க நகைகள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் நேற்று ஒலவக்கோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவையில் இருந்து கோர்பா- திருவனந்தபுரம் ரெயில் வந்தது. ரெயிலில் ஏறி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகளை கண்டதும் ரெயிலில் இருந்து 3 பேர் குதித்து தப்பி ஓட முயன்றனர்.

உஷாரான அதிகாரிகள் அவர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 3.48 கிலோ தங்க நகைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர குமார் (வயது 30), பூபேந்திர சிங் (20), ரேஞ்சர் சிங் (26) ஆகியோர் என்பதும் அவர்கள் கோவையில் இருந்து தங்க நகைகளை திருச்சூருக்கு கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News