செய்திகள்
கேரளாவில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 2 மாணவர்கள் கைது
கேரளாவில் மலப்புரம் பகுதியில் உள்ள கல்லூரியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
கல்லூரி முதல்வர் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதில் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முகம்மது ரின்ஷாத் (வயது 20), முகம்மது பரிஷ் (19) ஆகியோர் போஸ்டர் ஒட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான மாணவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் 124ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட் டது.
இந்த மாணவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? போஸ்டர் ஒட்ட தூண்டியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
கல்லூரி முதல்வர் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதில் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முகம்மது ரின்ஷாத் (வயது 20), முகம்மது பரிஷ் (19) ஆகியோர் போஸ்டர் ஒட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான மாணவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் 124ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட் டது.
இந்த மாணவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? போஸ்டர் ஒட்ட தூண்டியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews