செய்திகள்

ராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

Published On 2019-02-15 14:54 GMT   |   Update On 2019-02-15 14:54 GMT
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவத்தின் 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார அமலாக்கத்துறை இன்று முடக்கியது. #EDattaches #RobertVadra #Bikanerlandscam
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் நகரில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டில் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியது. பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா தனது தாய் மவ்ரீனுடன் சமீபத்தில் தொடர்ந்து விசாரணைக்குஆஜரானார்.  அவர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவத்துக்கு சொந்தமான 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பொருளாதார முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் இன்றிரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.  #EDattaches #RobertVadra #Bikanerlandscam
Tags:    

Similar News