search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadra appears"

    சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை ரத்து செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தியது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இவ்வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.

    இதற்கிடையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி ரோவ்ஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா சமீபத்தில் மனு செய்திருந்தார்.


    லண்டன் பங்களா

    இந்நிலையில், ராபர்ட் வதேராவுக்கும் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ராபர்ட் வதேரா சரியாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அதனால், அவரை விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

    எனவே, இந்த வழக்கின் தன்மை அறியாமல்  ராபர்ட் வதேராவுக்கும் அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறையின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறையின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்குமாறு ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி சந்திர சேகர் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
    சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவத்தின் 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார அமலாக்கத்துறை இன்று முடக்கியது. #EDattaches #RobertVadra #Bikanerlandscam
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் நகரில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டில் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியது. பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

    இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா தனது தாய் மவ்ரீனுடன் சமீபத்தில் தொடர்ந்து விசாரணைக்குஆஜரானார்.  அவர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவத்துக்கு சொந்தமான 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பொருளாதார முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் இன்றிரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.  #EDattaches #RobertVadra #Bikanerlandscam
    லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3வது முறையாக இன்று விசாரணைக்கு ஆஜரானார். #RobertVadra

    புதுடெல்லி:

    சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண மாற்ற வழக்குகள் உள்ளன. இதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    முதலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க மறுத்தார். டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு வர சம்மதித்தார்.

    கடந்த புதன்கிழமை முதன் முதலாக ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அன்று அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள். லண்டனில் சட்ட விரோதமாக வாங்கி உள்ள  சொத்துக்கள் பற்றி ராபர்ட் வதேராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

    மறுநாள் வியாழக்கிழமையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அன்றைய தினம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அன்று ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரியுடன் உள்ள தொடர்பு பற்றி தகவல் பரிமாற்ற ஆதாரங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    ராபர்ட் வதேராவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அவர் கைப்படவே பதில் எழுதி தரவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் முதல் கட்டமாக நடந்த விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று ராபர்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்பட வில்லை. ஆனால் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதை ஏற்று 3-வது நாளாக இன்று (சனிக் கிழமை) ராபர்ட் வதேரா ஆஜரானார்.

    காலை 10.45 மணிக்கு அவர் தனது காரில் மத்திய டெல்லியில் உள்ள ஜாம்நகர் அவுஸ் அலுவலகத்துக்கு வந்தார். 11 மணிக்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள்.

    லண்டனில் சொத்துக்கள் வாங்கியது எப்படி என்று அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தினார்கள். அதற்கான பண பரிமாற்றம் நடந்தது பற்றியும் கேட்டனர். மேலும் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டனர்.

    ஆனால் தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று ராபர்ட் வதேரா தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பான அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே வருகிற 12-ந்தேதி ராபர்ட் வதேரா ராஜஸ்தான் மாநிலம் சென்று ஜெய்ப்பூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நில மோசடி தொடர்பான வழக்கில் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடத்தும் அடுத்தடுத்து விசாரணைகளால் ராபர்ட் வதேரா கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு வந்தபோது சற்று சோர்வாக காணப்பட்டார்.

    இந்த நிலையில் ராபர்ட் வதேராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு ராகுல் கூறுகையில், “எனக்கு அதுபற்றி கவலையில்லை. ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தட்டும் அல்லது சிதம்ரபத்திடம் விசாரணை நடத்தட்டும் அதுபோல ரபேல் போர் விமான ஒப்பந்த மோசடி பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.” என்றார். #RobertVadra

    ×