search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை விசாரணையில் இன்று 3வது முறையாக ஆஜர்
    X

    ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை விசாரணையில் இன்று 3வது முறையாக ஆஜர்

    லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3வது முறையாக இன்று விசாரணைக்கு ஆஜரானார். #RobertVadra

    புதுடெல்லி:

    சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண மாற்ற வழக்குகள் உள்ளன. இதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    முதலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க மறுத்தார். டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு வர சம்மதித்தார்.

    கடந்த புதன்கிழமை முதன் முதலாக ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அன்று அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள். லண்டனில் சட்ட விரோதமாக வாங்கி உள்ள  சொத்துக்கள் பற்றி ராபர்ட் வதேராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

    மறுநாள் வியாழக்கிழமையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அன்றைய தினம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அன்று ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரியுடன் உள்ள தொடர்பு பற்றி தகவல் பரிமாற்ற ஆதாரங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    ராபர்ட் வதேராவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அவர் கைப்படவே பதில் எழுதி தரவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் முதல் கட்டமாக நடந்த விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று ராபர்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்பட வில்லை. ஆனால் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதை ஏற்று 3-வது நாளாக இன்று (சனிக் கிழமை) ராபர்ட் வதேரா ஆஜரானார்.

    காலை 10.45 மணிக்கு அவர் தனது காரில் மத்திய டெல்லியில் உள்ள ஜாம்நகர் அவுஸ் அலுவலகத்துக்கு வந்தார். 11 மணிக்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள்.

    லண்டனில் சொத்துக்கள் வாங்கியது எப்படி என்று அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தினார்கள். அதற்கான பண பரிமாற்றம் நடந்தது பற்றியும் கேட்டனர். மேலும் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டனர்.

    ஆனால் தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று ராபர்ட் வதேரா தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பான அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே வருகிற 12-ந்தேதி ராபர்ட் வதேரா ராஜஸ்தான் மாநிலம் சென்று ஜெய்ப்பூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நில மோசடி தொடர்பான வழக்கில் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடத்தும் அடுத்தடுத்து விசாரணைகளால் ராபர்ட் வதேரா கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு வந்தபோது சற்று சோர்வாக காணப்பட்டார்.

    இந்த நிலையில் ராபர்ட் வதேராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு ராகுல் கூறுகையில், “எனக்கு அதுபற்றி கவலையில்லை. ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தட்டும் அல்லது சிதம்ரபத்திடம் விசாரணை நடத்தட்டும் அதுபோல ரபேல் போர் விமான ஒப்பந்த மோசடி பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.” என்றார். #RobertVadra

    Next Story
    ×