செய்திகள்

உத்தரகாண்டில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

Published On 2019-01-27 14:52 GMT   |   Update On 2019-01-27 14:52 GMT
உத்தரகாண்டில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UttarakhandAccident
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தின் பாராகோட் பகுதியை சேர்ந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்காக காரில் எடுத்துச் சென்றனர். அங்குள்ள லோஹா காட் பகுதியில் கார் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 6 பேரும், மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 12 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த மீட்புக்குழு அங்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டது, பள்ளத்தில் விழுந்தவர்களை கயிறுகள் கட்டி மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #UttarakhandAccident
Tags:    

Similar News