செய்திகள்

ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் - நிதின் கட்காரி தகவல்

Published On 2019-01-22 00:24 GMT   |   Update On 2019-01-22 00:24 GMT
ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari #Godavari #Cauvery
அமராவதி:

ஆந்திராவின் அமராவதியில் நடந்த பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இது விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்காக ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கியில் இருந்து நிதியுதவி கோரப்படும்.

இந்த திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில் கால்வாய்களை உருவாக்காமல், சிறப்பு தொழில்நுட்பத்துடன் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.  #NitinGadkari #Godavari #Cauvery
Tags:    

Similar News