செய்திகள்

தென்னிந்திய தலைவர்களை கொல்ல சதி- ஆப்கானிஸ்தான் நாட்டவர் உள்ளிட்ட 3 பேர் கைது

Published On 2019-01-19 09:49 GMT   |   Update On 2019-01-19 09:49 GMT
தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி செய்ததாக, டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #DelhiPolice #PlottersHeld
புதுடெல்லி:

குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பல் சதி செய்திருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு படை போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களில் ஒருவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வாலி முகமது என்பது தெரியவந்தது. மற்றவர்கள் டெல்லி மதாங்கிர் பகுதியைச் சேர்ந்த ஷேக் ரியாஜுதீன், கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முத்தாசிம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் சேர்ந்து தென்னிந்தியாவில் உள்ள ஒரு சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #DelhiPolice #PlottersHeld 
Tags:    

Similar News