செய்திகள்
சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருது- தமிழக ஆளுநர் வழங்குகிறார்
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட 12 எம்பிக்களுக்கு சன்சாத் ரத்னா விருதுகளை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்க உள்ளார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
சென்னை:
விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்க உள்ளார். விழாவில் மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர், பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மக்களவையின் 9 எம்பிக்கள், மக்களவையின் ஒரு நிலைக்குழு உறுப்பினர் மற்றும் இரண்டு ஓய்வு பெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த விருதுகளை பெற உள்ளனர். மக்களவை செயலகம் மற்றும் பிஆர்எஸ் சட்டமன்ற ஆய்வு நிறுவனம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் விருதுக்கான எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். #SansadRatnaAwards #BanwarilalPurohit
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்பிக்களை கவுரவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த பிரைம் பாயின்ட் பவுண்டேசன், பிரசன்ஸ் இ மேகசின் சார்பில் ‘சன்சாத் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சன்சாத் ரத்னா விருது வழங்கும் விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை மறுதினம் (ஜனவரி 19) நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்க உள்ளார். விழாவில் மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர், பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மக்களவையின் 9 எம்பிக்கள், மக்களவையின் ஒரு நிலைக்குழு உறுப்பினர் மற்றும் இரண்டு ஓய்வு பெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த விருதுகளை பெற உள்ளனர். மக்களவை செயலகம் மற்றும் பிஆர்எஸ் சட்டமன்ற ஆய்வு நிறுவனம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் விருதுக்கான எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். #SansadRatnaAwards #BanwarilalPurohit