செய்திகள்

இந்திய ராணுவத்தின் கூட்டுப்போர் ஒத்திகை சாகசங்கள் -நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

Published On 2019-01-14 19:33 IST   |   Update On 2019-01-14 19:33:00 IST
அந்தமானில் இந்திய ராணுவத்தை சேர்ந்த முப்படை வீரர்கள் இன்று நடத்திய கூட்டுப்போர் ஒத்திகை சாகசங்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு பாராட்டினார். #NirmalaSitharaman #Andaman
போர்ட் பிளையர்:

இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து கூட்டுப்போர் ஒத்திகையை அவ்வப்போது மேற்கொள்கின்றன. இதை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இருநாள் பயணமாக நேற்று போர்ட் பிளேருக்கு வந்தார்.
 
ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளையும் திறந்து வைத்த நிர்மலா சீதாராமன், கேம்ப்பெல் கடற்கரை பகுதியில் நீரிலும், நிலத்திலும், வானிலும் இந்திய வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை அவர் இன்று பார்வையிட்டார். வீரர்களின் சாகசத்தை பாராட்டியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். #NirmalaSitharaman #Andaman 
Tags:    

Similar News