செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தாக்குதல் - பயங்கரவாதி கொல்லப்பட்டான்

Published On 2019-01-08 08:30 GMT   |   Update On 2019-01-08 08:30 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #Pulwamasecurityforces #Pulwamaencounter
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட சவுதரி பாக் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள் இயந்திர துப்பாக்கிகளால் ரோந்து வாகனத்தின் மீது சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இறந்தவனின் பெயர் வாஜித் கான் (எ) இர்பான் அஹமத் ராத்தர் என்று தெரியவந்துள்ளது. #Pulwamasecurityforces #Pulwamaencounter
Tags:    

Similar News