செய்திகள்

பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2018-12-31 09:40 GMT   |   Update On 2018-12-31 09:40 GMT
முத்தலாக் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்களும், காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று  முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது பாராளுமன்ற தேர்வு குழுவின் (செலக்ட் கமிட்டி) பரிசீலனைக்கு அனுப்பி வைக்காமல் முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார்.

இந்த மசோதா பல கோடி முஸ்லிம்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதே கருத்தை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரெக் ஓ பிரியனும் பேசினார்.



அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனால், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அதன்பின்னரும், பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஜனவரி இரண்டாம் தேதிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார். #RajyaSabha #RajyaSabhaadjourned #tripletalaq #tripletalaqbill 
Tags:    

Similar News