செய்திகள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் - 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவி ஏற்றனர்

Published On 2018-12-22 13:16 GMT   |   Update On 2018-12-22 13:16 GMT
கர்நாடக மாநிலத்தை ஆளும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர். #Karnatakaministry #ministryexpanded #CongressMLAs
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது. முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான மந்திரிசபை 7 மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்றுகொண்டது. பின்னர் கடந்த ஜூன் 5 தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மந்திரி ஜி.பரமேஸ்வரா உள்பட 24 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கர்நாடக சட்டபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இம்மாநிலத்தில் 34 பேர்வரை மந்திரிகளாக பணியாற்றலாம். அவ்வகையில், கூட்டணி அரசு என்ற ஒப்பந்தப்படி மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று  மந்திரிகளாக இணைக்கப்பட்டனர்.

பெங்களூரு நகரில் உள்ள ராஜ்பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.பாட்டீல், ஆர்.பி.திமப்புரா, சத்தீஷ் ஜரிக்கோலி, சி.எஸ்.ஷிவாலி, பரமேஸ்வரா நாய்கி, இ.துக்காராம், ரஹிம் கான் மற்றும் எம்.டி.பி. நாகராஜ் ஆகியோரை மந்திரிகளாக நியமித்து கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல் மந்திரி குமாரசாமி, துணை மந்திரி ஜி.பரமேஸ்வரா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்று புதிய மந்திரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்று பதவியேற்ற மந்திரிகளுடன் சேர்த்து அம்மாநில மந்திரிசபையின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Karnatakaministry #ministryexpanded #CongressMLAs 
Tags:    

Similar News