செய்திகள்

மேற்கு வங்காளத்தில் அமித்ஷா ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

Published On 2018-12-06 19:00 GMT   |   Update On 2018-12-06 19:00 GMT
மேற்கு வங்காளத்தில் அமித்ஷா ரத யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. #AmitShah #RathYatra #Bengal
கொல்கத்தா:

பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் 3 ரத யாத்திரைகளை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளார். இதில் முதல் யாத்திரை கூச்பெகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதாக இருந்தது.

ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 
Tags:    

Similar News