செய்திகள்
கேரளாவில் ரூ. 14 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி வந்தவர் கைது
கேரளாவில் தனது ஆடைக்குள் ரூ. 14 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல் மண்ணா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் லால் இன்று காலை விருந்து மண்ணா பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனை தொடர்ந்து அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது ஆடைக்குள் ரூ. 14 லட்சத்தை மறைத்து வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கோடூர் பகுதியை சேர்ந்த சைனுதீன் (47) என்பது தெரிய தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
சைனுதீன் வைத்திருந்தது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மலப்புரத்தை சேர்ந்த ரசீது என்பவர் தன்னிடம் கொடுத்து பாலக்காட்டில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கொடுக்கும் படி கூறியதாக கைதான சைனுதீன் தெரிவித்தார். அவரிடமிருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல் மண்ணா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் லால் இன்று காலை விருந்து மண்ணா பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனை தொடர்ந்து அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது ஆடைக்குள் ரூ. 14 லட்சத்தை மறைத்து வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கோடூர் பகுதியை சேர்ந்த சைனுதீன் (47) என்பது தெரிய தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
சைனுதீன் வைத்திருந்தது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மலப்புரத்தை சேர்ந்த ரசீது என்பவர் தன்னிடம் கொடுத்து பாலக்காட்டில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கொடுக்கும் படி கூறியதாக கைதான சைனுதீன் தெரிவித்தார். அவரிடமிருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews