செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் போராட்டம்- டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்

Published On 2018-11-29 07:10 GMT   |   Update On 2018-11-29 07:10 GMT
டெல்லியில் மிகப்பிரமாண்ட போராட்டத்தை நடத்துவதற்காக நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். #FarmersProtest
புதுடெல்லி:

டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். 207 விவசாய அமைப்புகள் இணைந்த அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில், இப்போராட்டம் நடக்கிறது. கடன் நிவாரணம், விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.


இன்று (வியாழக்கிழமை) டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமலீலா மைதானத்துக்கு ஊர்வலமாக செல்கிறார்கள். நாளை அங்கிருந்து பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள். நாடாளுமன்ற தெருவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், அவர்களிடையே பா.ஜனதா தவிர, இதர கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். விவசாய சங்க தலைவர்களும் விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசுகின்றனர்.

டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கின்றனர். #FarmersProtest
Tags:    

Similar News