செய்திகள்

பாகிஸ்தான் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு - பாதுகாப்பு படை வீரர் பலி

Published On 2018-11-19 19:40 IST   |   Update On 2018-11-19 19:40:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள சோதனைச் சாவடியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். #BSFjawan #BSFjawankilled #blastinSamba #Sambadistrict
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் சோதனைச் சாவடியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த  ஒருவர் உயிரிழந்தார். 

மேலும், இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சில வீரர்கள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #BSFjawan #BSFjawankilled #blastinSamba #Sambadistrict
Tags:    

Similar News