செய்திகள்
இந்து அமைப்பு பெண் தலைவர் சசிகலா மீண்டும் சபரிமலை பயணம்
சபரிமலைக்கு பேரனின் சோறு ஊட்டு நிகழ்ச்சிக்காக மீண்டும் செல்வதாக போலீசாரிடம் தெரிவித்த இந்து அமைப்பு பெண் தலைவர் சசிகலாவை போலீசார் எச்சரித்து சபரிமலை செல்ல அனுமதித்தனர். #Sabarimala #SabarimalaTemple
திருவனந்தபுரம்:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா.
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறந்த அன்று இவர் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார். அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இன்று அவர் மீண்டும் சபரிமலை புறப்பட்டார். பேரனின் சோறு ஊட்டு நிகழ்ச்சிக்காக சபரிமலை செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் உத்தரவாதம் கொடுத்தார். இன்று இரவே அவர் சபரிமலையில் இருந்து ஊர் திரும்ப வேண்டும் என்று போலீசார் எச்சரித்து அவர் சபரிமலை செல்ல அனுமதித்தனர். #Sabarimala #SabarimalaTemple
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா.
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறந்த அன்று இவர் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார். அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இன்று அவர் மீண்டும் சபரிமலை புறப்பட்டார். பேரனின் சோறு ஊட்டு நிகழ்ச்சிக்காக சபரிமலை செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் உத்தரவாதம் கொடுத்தார். இன்று இரவே அவர் சபரிமலையில் இருந்து ஊர் திரும்ப வேண்டும் என்று போலீசார் எச்சரித்து அவர் சபரிமலை செல்ல அனுமதித்தனர். #Sabarimala #SabarimalaTemple