செய்திகள்

கர்நாடகாவில் இன்று பேருந்து, லாரி நேருக்குநேர் மோதல் - 6 பேர் பலி

Published On 2018-11-17 11:20 GMT   |   Update On 2018-11-17 11:20 GMT
கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்த பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
பெங்களூரு:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கர்நாடகத்துக்கு ஒரு பேருந்து சுற்றுலா வந்தது. அதில் 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

ஹூப்ளி அருகே அன்னிகிரி தாலுகா பத்ராபூர் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலை 63ல் பேருந்து வந்தபோது எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.



தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident 
Tags:    

Similar News