செய்திகள்

ஒரு வாரம் அரசுமுறை பயணமாக வியட்நாம், ஆஸ்திரேலியா செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On 2018-11-16 15:35 GMT   |   Update On 2018-11-16 15:35 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு வார காலமாக அரசுமுறை பயணமாக வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்கிறார். #RamnathKovind ##Vietnam #Australia
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருவார கால அரசுமுறை பயணமாக வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வியட்நாம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது  பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

நவம்பர் 21ம் தேதி வியட்நாமில் இருந்து புறப்படும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியா செல்கிறார். அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்திக்கிறார்.

மேலும், மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு பாராமட்டா பகுதியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார் என தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. #RamnathKovind ##Vietnam #Australia
Tags:    

Similar News