செய்திகள்

பஞ்சாப் ரெயில் விபத்து - அமிர்தசரஸ், மனவாலா வழித்தடத்தில் 8 ரெயில்கள் ரத்து

Published On 2018-10-20 04:10 GMT   |   Update On 2018-10-20 08:08 GMT
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த ரெயில் விபத்தைத் தொடர்ந்து அமிர்தசரஸ், மனவாலா வழித்தடத்தில் இன்று 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #PunjabTrainAccident #TrainsCancelled
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இடைவிடாமல் வெடித்துக்கொண்டிருந்த பட்டாசு சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பலர் ரெயிலில் அடிபட்டனர்.



இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமிர்தசரஸ்-மனவாலா ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து  நிகழ்ந்தது.

இந்த விபத்தை தொடர்ந்து அமிர்தசரஸ்-மனவாலா வழித்தடத்தில் செல்லக்கூடிய 8 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 ரெயில்கள்  மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 15 ரெயில்கள் அருகில் உள்ள ரெயில் நிலையங்கள் வரை இயக்கப்படுகின்றன. #AmritsarTrainAccident #PunjabTrainAccident #Dussehra #TrainsCancelled
Tags:    

Similar News