செய்திகள்

பெண்ணியவாதிகள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல - கேரள அமைச்சர் ஆவேசம்

Published On 2018-10-19 05:21 GMT   |   Update On 2018-10-19 05:21 GMT
பெண்ணியவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல என கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். #SabarimalaProtests #DevaswomsMinister
பத்தனம்திட்டா:

சபரிமலை தீர்ப்புக்கு வலுத்து வரும் எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி ஆந்திராவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரெகானா என இரண்டு பெண்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.

இதுபற்றி தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. பெண்ணியவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.



இன்று கோவிலுக்கு வந்த பெண்களின் பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. பெண்ணியத்தை நிரூபிக்கவோ, போராட்டம் நடத்தவோ சபரிமலை உகந்த இடம் அல்ல. பெண்ணியவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல.

இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaProtests #DevaswomsMinister

Tags:    

Similar News