செய்திகள்

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தற்கொலை முயற்சி

Published On 2018-10-16 10:04 GMT   |   Update On 2018-10-16 10:04 GMT
சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் ஒரு பெண், மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sabarimalaverdict
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.



இந்நிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் ஒரு பெண் இன்று தற்கொலை செய்ய முயன்றார். இதற்காக அவர் ஒரு மரத்தில் தூக்கு மாட்டினார். அப்போது அவரை போலீசாரும் பொதுமக்களும் காப்பாற்றி அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்பத்தியது.

இதற்கிடையே  கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது. இதில் பந்தளம் ராஜகுடும்பம் திருவாங்கூர் தேவசம் போர்டுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை.

சபரி மலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே, வரும் நாட்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என கூறப்படுகிறது.  #Sabarimalaverdict 
Tags:    

Similar News