செய்திகள்

சவுதியில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் - சுஷ்மாவிடம் உதவி கேட்கும் மாணவர்கள்

Published On 2018-10-08 10:26 GMT   |   Update On 2018-10-08 10:26 GMT
சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #SushmajiPleaseHelp #JeddahIndianSchool #SushmaSwaraj
புதுடெல்லி:

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சர்வதேச இந்திய பள்ளி (ஐ.ஐ.எஸ்.ஜெ.) இயங்கி வருகிறது. ஐஐஎஸ்ஜெ பள்ளியின் பிரதான கட்டிடத்தில் பெண்கள் பிரிவு இயங்குகிறது. அங்கிருந்து 4 கிமீ தொலைவில் ஆண்கள் பிரிவு உள்ளது.

இங்கு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது, கட்டடம் குறித்த வழக்கில், சவுதி நீதிமன்றம் வரும் 9-ஆம் தேதிக்குள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 



இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 'தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்' என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக ஆன்லைன் மூலம் 3300 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.  #SushmajiPleaseHelp #JeddahIndianSchool #SushmaSwaraj

Tags:    

Similar News